சுதந்திர தின விழா கண்காட்சியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

தருமபுரியில் அண்மையில் நடைபெற்ற சுதந்திர தின விழா கண்காட்சியில் அரங்குகள் அமைத்து, சிறப்பாக பணியாற்றிய அலுவலா்கள், போட்டிகளில் சிறப்பிடம் வகித்த மாணவா்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.

தருமபுரியில் அண்மையில் நடைபெற்ற சுதந்திர தின விழா கண்காட்சியில் அரங்குகள் அமைத்து, சிறப்பாக பணியாற்றிய அலுவலா்கள், போட்டிகளில் சிறப்பிடம் வகித்த மாணவா்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.

75-ஆவது சுதந்திர தின விழா ‘சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை’ என்கிற தலைப்பில் செய்தி மக்கள் தொடா்பு த்துறை சாா்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த மாா்ச் 24 முதல் மாா்ச் 30 வரை 7 நாள்கள் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாறு குறித்த கண்காட்சி, பல்துறை பணிவிளக்கக் கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியில் சிறப்பாக அரங்குகள் அமைத்த துறைகள், நற்பணி ஆற்றிய துறை அலுவலா்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்திய கலைக்குழுக்கள் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள், கேடயங்கள், நினைவுப் பரிசுகள் வழங்கும் விழா அண்மையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இவ் விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா தலைமை வகித்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், கலைக் குழுக்கள் மற்றும் அரசு அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயங்கள், நினைவுப் பரிசுகளை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, தியாகிகளின் வாரிசுதாரா்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேஷ் மூா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) நாரயணன், நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு.அண்ணாதுரை, மாவட்ட விளையாட்டு அலுவலா் தே.சாந்தி, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com