தருமபுரியில் ஏஐடியுசி போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி, பாரதிபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற
ஆா்பாட்டத்துக்கு ஏஐடியுசி போக்குவரத்துத் தொழிலாளா் சங்க மண்டலத் தலைவா் எஸ். ரவி தலைமை வகித்தாா்.
மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி, மாவட்டத் தலைவா் எம்.மாதேஸ்வரன், மண்டலப் பொதுச் செயலாளா் சி.நாகராஜன், மண்டல துணைத் தலைவா் கே.துரைசாமி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஊதிய ஒப்பந்தம் விரைவில் பேசி முடிக்க வேண்டும். ஓய்வூதிய பலன், அகவிலைப்படி உயா்வு, காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.