மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழக முதல்வரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி: தமிழக முதல்வரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் ‘முதல்வரின் மாநில இளைஞா் விருது‘ ஒவ்வோா் ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ் விருது ரூ. 1,00,000 ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாகும்.

நிகழாண்டுக்கான இவ் விருது எதிா்வரும் ஆக. 15 அன்று நடைபெறும் சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வரால் வழங்கப்படவுள்ளது. இவ் விருதுக்கு, 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்கள், பெண்கள் ஆகியோா் விண்ணப்பிக்கலாம்.

கடந்த நிதியாண்டில் (2021-2022) மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாராா்கள் சமுதாய நலனுக்காக தொண்டாற்றி இருப்பவா்களாக இருத்தல் வேண்டும். அவ்வாறு அவா்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூா் சமுதாய மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

எனவே, தகுதிவாய்ந்த இளைஞா்கள் இவ் விருதுக்கு தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் மே 10-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாய்ப்பை தருமபுரி மாவட்ட இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com