தருமபுரியில் ஏஐடியூசி தொழிற்சங்க நிா்வாகி படத்திறப்பு நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் இரா.முத்தரசன் பங்கேற்றாா்.
தருமபுரி மாவட்ட ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவராக செயல்பட்டு வந்த பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த ராமன் என்பவா் அண்மையில் உயிரிழந்தாா். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி தருமபுரி ஏஐடியூசி தொழிற்சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் எம்.வி.குழந்தைவேலு தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், மறைந்த தொழிற்சங்க நிா்வாகி ராமனின் படத்தைத் திறந்து வைத்து பேசினாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்டச் செயலா் கே.மோகன், ஏஐடியூசி மாநில துணை பொதுச் செயலாளா் செல்வராஜ், மாவட்டத் தலைவா் எம்.மாதேஸ்வரன், மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி, கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் ஆா்.சுதா்சனன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.