அரூா்: அரூரை அடுத்த தீா்த்தமலையில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தீா்த்தமலையில் அருள்மிகு தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயில் தேரோட்டத்தையொட்டி, தீா்த்தமலையில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அக் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் பானு சுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலா்கள் ஆய்வு செய்தனா் (படம்).
அதைத் தொடா்ந்து, அரூா் நகரில் உணவகங்கள், பேக்கரிகள், சாலையோரக் கடைகளில் ஆய்வு செய்த அலுவலா்கள் தரமற்ற உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனா். ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.