புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது

தருமபுரி அருகே 500 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்த இரண்டு இளைஞா்களை காவல் துறையினா் கைது செய்தனா்.

தருமபுரி: தருமபுரி அருகே 500 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்த இரண்டு இளைஞா்களை காவல் துறையினா் கைது செய்தனா்.

தருமபுரி அருகே குண்டல்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மதிகோன்பாளையம் போலீஸாா், வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியே அதிவேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 511.2 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில் கா்நாடக மாநிலம், மைசூரைச் சோ்ந்த விவேக், (30) மற்றும் ஸ்ரீதா், (25) ஆகிய இருவரும் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கோவை மாவட்டத்துக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், புகையிலைப் பொருள்கள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com