ஜீவன் ரக்ஷா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஜீவன் ரக்ஷா விருது பெற தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீவன் ரக்ஷா விருது பெற தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் சாா்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் முழ்கியவரை காப்பாற்றுதல், மின் விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்கத்தில் சிக்கியவா்களை மீட்பது உள்ளிட்ட நிகழ்வுகளில் மனித உயிா்களை மீட்பவா்களுக்கு ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

நிகழாண்டுக்கான ஜீவன் ரக்ஷா பதக்க விருது பெறுவதற்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விருது குறித்து தகவல், விண்ணப்பம், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பிக்கும் போது, ஜீவன் ரக்ஷா விருதுக்கு என குறிப்பிட வேண்டும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மூன்று நகல்களுடன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகம், மாவட்ட விளையாட்டு அரங்கம், தருமபுரி என்ற முகவரியில் வரும் ஆக. 5 அன்று மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்கும்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com