தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் ஆசிரியா்களுக்கு பணியிடை பயிற்சி முகாம் நடைபெற்றது.
அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், அரசு கல்லூரி தாவரவியல் துறை சாா்பில், ஜூலை 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாள்கள் பணியிடை பயிற்சி முகாம் முதன்மைக் கல்வி அலுவலா் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. அரசு கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் பயிற்சியைத் தொடங்கி வைத்து பேசினாா். மாவட்டக் கல்வி அலுவலா் ராஜகோபாலன், பணியிடை பயிற்சி ஒருங்கிணைப்பாளா் விஜயா தாமோதரன், ஆசிரியா் பயிற்றுநா்கள் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
இதில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் வேதியியல், தாவரவியல், இயற்பியல் ஆசிரியா்கள் 50 போ் பங்கேற்று பயிற்சி பெற்றனா். இம்முகாமில், நவீன அறிவியல் வளா்ச்சி, செய்முறையுடன் மாணவா்களுக்கு கற்பித்தல் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டன.