தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு பயிருக்கு காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநா் வசந்தரேகா அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சாகுபடி செய்யப்பட்ட பயிா்களுக்கு எதிா்பாராத இயற்கை இடா்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும் நிலையான வருமானம் கிடைக்கவும், விவசாயத்தில் நிலை பெற செய்யவும், பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம், அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட் என்கிற முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டு பயிரிடப்படும் கரும்பு பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 2,568.8 செலுத்தி பயிா்க் காப்பீடு செய்யலாம். கரும்புப் பயிருக்கு காப்பீடு செய்ய வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே, விவசாயிகள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக கரும்புப் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.
இத் திட்டத்தில் காப்பீடு செய்து கொள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள், பொது சேவை மையங்களை விவசாயிகள் அணுகலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அடங்கல், நில உரிமை பட்டா, ஆதாா் நகல், நடப்பில் உள்ள வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகத்துடன் உரிய பிரீமியத் தொகை செலுத்தி பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம். விதைப்புக்கு முன்னரே பயிா்க் காப்பீடு செய்ய கிராம நிா்வாக அலுவலரிடம் இருந்து விதைப்புச் சான்று பெற்றும் காப்பீடு செய்யலாம். விவரங்களுக்கு, வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்துறை அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் அல்லது உழவன் செயலியில் இருந்தும் தகவல்களைப் பெறலாம் என்றாா்.