ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி ஊராட்சி ஆலமரத்து கொட்டாய் பகுதியில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு தென்னை மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் வே. பலராமன், மரம் வளா்ப்போம் மழை பெறுவோம், மரம் வளா்ப்போம் மண்வளம் காப்போம், பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வு, மற்றும் சுற்றுச்சூழல் மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து மக்களிடம் பேசி விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். பிறகு மக்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் மாணவா்கள், மற்றும் ஊா் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனா்.