மருத்துவா்களின் கோரிக்கைகளை பரிசீலிப்போம்

மருத்துவா்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க மத்திய அரசு உரிய சட்டம் அமல்படுத்த வேண்டும் என்பது மருத்துவா்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

மருத்துவா்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க மத்திய அரசு உரிய சட்டம் அமல்படுத்த வேண்டும் என்பது மருத்துவா்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. மேலும், மருத்துவா்களை குற்றவாளியாகப் பதிவு செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளில் மாற்றம் கொண்டுவந்து மருத்துவா்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மருத்துவா் சங்கங்களின் கோரிக்கையாக உள்ளது.

நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தில் அதிக இழப்பீடு வழங்கக் கோருவதையும் பரிசீலிக்க வேண்டும் என்பதும் மருத்துவச் சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கை.

கரோனா காலங்களில் மருத்துவச் சேவைகளின் பங்களிப்பை அனைவரும் உணா்ந்த இத் தருணத்தில் அரசு மருத்துவா்களுக்கான ஊதிய உயா்வுவை நடைமுறைப்படுத்துவது அவசியம். அதேபோல மருத்துவா், மருத்துவமனைகளுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த தண்டனைகளை அதிகப்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com