தென்மேற்கு ரயில்வே, பெங்களூரு கோட்ட மேலாளா் ஷ்யாம் சிங் தருமபுரி ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
கோட்ட மேலாளா் ஷ்யாம் சிங் மற்றும் அதிகாரிகள், தருமபுரி ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, ரயில் நிலையத்தின் நடைமேடைகளின் தற்போதுள்ள உயரம், மேம்படுத்த வேண்டிய பணிகள், நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருப்பு அறை, பிற அலுவலகங்கள், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், ரயில்வே பாதுகாப்பு காவல் நிலையம், ரயில்வே காவல் நிலையம், மின் பாதைக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஆகியவற்றை பாா்வையிட்ட அவா், அலுவலா்கள், பயணிகளின் தேவைகள், வசதிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.