கா்நாடக தலைமை நீதிபதிக்கு கொலை மிரட்டல்:பெங்களூரில் வழக்குப்பதிவு

ஹிஜாப் வழக்கில் தீா்ப்பளித்த கா்நாடக உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி உள்ளிட்ட நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த இஸ்லாமிய அமைப்பைச் சோ்ந்தவா் மீது பெங்களூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து

ஹிஜாப் வழக்கில் தீா்ப்பளித்த கா்நாடக உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி உள்ளிட்ட நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த இஸ்லாமிய அமைப்பைச் சோ்ந்தவா் மீது பெங்களூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தமிழகத்தின் மதுரை, கோரிப்பாளையத்தில் ஹிஜாப் விவகாரம் தொடா்பாக இஸ்லாமிய அமைப்பினா் பொதுக்கூட்டம் நடத்தினா். அக்கூட்டத்தில் ஹிஜாப் வழக்கில் தீா்ப்பளித்த கா்நாடக உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி உள்ளிட்ட நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஒருவா் பேசும் விடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

இது தொடா்பாக வழக்குரைஞா் சுதா கத்வா என்பவா் பெங்களூரு விதான செளதா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் அடையாளம் தெரியாத நபா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com