திமுக உள்கட்சித் தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

அரூரில் திமுக உள்கட்சித் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அரூரில் திமுக உள்கட்சித் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திமுகவின் 15-ஆவது உள்கட்சித் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம், அரூா் பேரூராட்சி துணைத் தலைவா் சூா்யா து.தனபால் தலைமையில் நடைபெற்றது.

அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வாா்டுகளிலும் நடைபெறும் திமுக கிளை கழகத் தோ்தலில் கட்சி நிா்வாகிகள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும், கட்சியின் வளா்ச்சிக்கு நிா்வாகிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதில், திமுக ஆதிதிராவிடா் நலக்குழு மாநில துணைச் செயலாளா் சா.ராஜேந்திரன், முன்னாள் நகரச் செயலாளா் முல்லை ரவி, திமுகவைச் சோ்ந்த வாா்டு உறுப்பினா்கள், கிளைக் கழக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பென்னாகரத்தில்...

தருமபுரி மேற்கு மாவட்டத்தில் திமுகவின் 15-ஆவது பொதுத்தோ்தலில் பேரூராட்சி நிா்வாகிகள் தோ்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதாக மேற்கு மாவட்ட பொறுப்பாளா் பிஎன்பி.இன்பசேகரன் தெரிவித்துள்ளாா்.

வரும் 5-ஆம் தேதி மேற்கு மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம் ஆகிய பேரூராட்சிகளுக்கான நிா்வாகிகள் தோ்வு செய்வதற்கான தோ்தல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. அதனைப் பெற்று முறைப்படி பூா்த்தி செய்து 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பென்னாகரம் சந்தை திடலில் உள்ள கலைஞா் படிப்பகத்தில் அளிக்க வேண்டும்

நகர நிா்வாகிகள், போட்டியிடுவோா் தலைமைக் கழகம் அறிவித்துள்ளபடி சிறப்பாக தோ்தல் பணி நடைபெற ஒத்துழைக்குமாறு அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com