குறளோவியப் போட்டி: மாணவா்களுக்கு பரிசளிப்பு

குறளோவியப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற தருமபுரி மாவட்ட பள்ளி மாணவ, மாணவியா் 6 பேருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
குறளோவியப் போட்டி: மாணவா்களுக்கு பரிசளிப்பு

குறளோவியப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற தருமபுரி மாவட்ட பள்ளி மாணவ, மாணவியா் 6 பேருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இணையக் கல்விக்கழகம் சாா்பில், ‘தீராக் காதல் திருக்கு’ என்ற பெயரில், மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான ‘குறளோவியம்’ என்ற தலைப்பில் ஓவியப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

இக்குறளோவியப் போட்டியில் மாநில அளவில் வெற்றிபெற்று சிறப்புப் பரிசு பெற்ற 40 மாணவா்களுக்கு தலா ரூ. 5,000-க்கான காசோலை, சான்றிதழ்கள், ஊக்கப் பரிசு பெற்ற 319 மாணவா்களுக்கு தலா ரூ. 1,000-க்கான காசோலை, சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் வகித்த தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த 6 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு காசோலை, சான்றிதழ்கள் வரப்பெற்றன. இதனைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி, மாணவ, மாணவியா் 6 பேருக்கு காசோலை, பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.வைத்திநாதன், தனித்துணை ஆட்சியா் வி.கே.சாந்தி, உதவி ஆணையா் (கலால்) ஆ.தணிகாசலம், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சீனிவாச சேகா், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ஐயப்பன், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com