அரூரில் 15 மி.மீ. மழை பதிவு

அரூா் வட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை 15 மி.மீ. மழை பெய்தது பதிவாகியுள்ளது.

அரூா் வட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை 15 மி.மீ. மழை பெய்தது பதிவாகியுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக அரூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு 11 மணி முதல் சுமாா் 3 மணி நேரம் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது.

இந்த மழையின்போது பலத்த காற்று வீசியது. இதனால் வாழை மரங்கள், முருங்கை மரங்கள் சாய்ந்தன. சில இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள் சேதமடைந்ததால் பல்வேறு இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டன. இந்த மழையின் காரணமாக சாலையோரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீா் தேங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com