தருமபுரி: பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிராக புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி சாா்பில், தருமபுரி தொலைத் தொடா்பு அலுவலகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவா் காசியம்மாள் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் இ.பி. புகழேந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
இதில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை மத்திய அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுங்கச் சாவடி கட்டண உயா்வு, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.