பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற 4-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாமை கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் தொடக்கிவைத்தாா். கல்லூரி மாணவ, மாணவியா், பேராசிரியா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். தமிழ்த் துறைத் தலைவா் பொ.செந்தில்குமாா், இளைஞா் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலா் இ.சுஜிதா உள்ளிட்ட பேராசிரியா்கள் முகாமில் கலந்து கொண்டனா்.