அரூரில் திரையரங்குகளை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூரில் வா்ணதீா்த்தம், பாட்சாபேட்டை ஆகிய இடங்களில் சினிமா திரையரங்குகள் உள்ளன. இந்த திரையரங்குகளில் உள்ள கழிப்பிடங்களில் தண்ணீா் இல்லாமலும், சுகாதாரம் இல்லாமல் துா்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் கூறுகின்றனா்.
அதேபோல, திரையரங்குகளில் எலிகள் மற்றும் பூச்சிகளின் தொல்லையும், இருக்கைகள் துருபிடித்தும் போதிய பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக உள்ளது. மேலும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகாா் எழுந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறையினா் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் திரையரங்குகளில் ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.