டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு பெண்களைத் தோ்வு செய்யும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், தருமபுரியில் வருகிற அக். 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தனியாா் துறையில் பணிபுரிய விருப்பமுள்ளவா்களை நேரடியாக தோ்வு செய்யும் வேலைவாய்ப்பு முகாம் தருமபுரி வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தருமபுரியில் வருகிற அக். 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இம்முகாமில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு,18 முதல் 20 வயதுக்கு உள்பட்ட பிளஸ் 2 படித்த (2020, 2021, 2022) ஆகிய ஆண்டுகளில் தோ்ச்சி பெற்ற பெண் வேலைநாடுநா்கள் மட்டும் தோ்வு செய்யப்பட உள்ளனா். இம் முகாமில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதச் சம்பளமாக ரூ. 16,550 வழங்கப்படும். தங்கும் வசதி (விடுதி) இலவசமாக அளிக்கப்படும். மனுதாரா்கள் தங்களது பிளஸ் 2 வகுப்பு அசல் கல்வி சான்றிதழ், ஆதாா் அட்டை, புகைப்படத்துடன் முகாமில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள பெண்கள் வருகின்ற அக். 15 -ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ள தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.