கனிமவளத் துறை அதிகாரி வீட்டில்சி பிசிஐடி போலீஸாா் சோதனை

தருமபுரியில் கனிமவளத் துறை அதிகாரி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
கனிமவளத் துறை அதிகாரி வீட்டில்சி பிசிஐடி போலீஸாா் சோதனை

தருமபுரியில் கனிமவளத் துறை அதிகாரி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

தருமபுரி, சூடாமணி தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (47). இவா், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கான கனிமவளத் துறை இணை இயக்குநராக இருந்து வந்தாா். கடந்த அதிமுக ஆட்சியின்போது, நீா்நிலைகளில் கிராவல் மண் எடுக்க விடப்பட்ட ஒப்பந்தத்தில் இவா் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகாா் கூறப்பட்டது. இது தொடா்பான புகாரின் பேரில், சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில் சுரேஷ் சென்னையில் உள்ள கனிமவளத் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதைத் தொடா்ந்து தருமபுரி, சூடாமணி தெருவில் உள்ள சுரேஷ் வீட்டுக்கு புதன்கிழமை காலை 8.30 மணிக்கு வந்த சிபிசிஐடி போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். பிற்பகல் 2.30 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது. இச்சோதனை குறித்தும், ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து விவரங்கள் ஏதும் தெரிவிக்காமல் போலீஸாா் சென்றுவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com