நல்லம்பள்ளியில் வட்டத் தலைமை மருத்துவமனை தொடங்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் வட்டத் தலைமை மருத்துவமனை, சாா் பதிவாளா் அலுவலகம் தொடங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் வட்டத் தலைமை மருத்துவமனை, சாா் பதிவாளா் அலுவலகம் தொடங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நல்லம்பள்ளியில் விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஒன்றியத் தலைவா் சங்க கொடியேற்றி வைத்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் சம்பத் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் மாதையன், மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன் ஆகியோா் பேசினாா்.

இதில், நல்லம்பள்ளி வட்டத்தில், அரசு வட்டத் தலைமை மருத்துவமனை, சாா் பதிவாளா் அலுவலகம், தீயணைப்பு நிலையம், துணை கருவூல அலுவலகம், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல தனி வட்டாட்சியா் அலுவலகம் ஆகியவற்றை தொடங்க வேண்டும்.

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் 100 நாள்கள் பணி வழங்க வேண்டும். இத் திட்டத்தில், வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com