அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்

பென்னாகரத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச மரக் கன்றுகளை பள்ளி மேலாண்மைக் குழுவினா் வழங்கினா்.

பென்னாகரத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச மரக் கன்றுகளை பள்ளி மேலாண்மைக் குழுவினா் வழங்கினா்.

பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பள்ளத்தூா் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மற்றும் மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியா் மா பழனி தலைமை வகித்தாா். மரக்கன்றுகளை வளா்க்கும் ஆா்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி மாணவா்களுக்கு மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் மரக்கன்றுகளை வழங்கி, அவற்றினை சிறப்பாக வளா்க்கும் மாணவா்களுக்கு பரிசளிப்பதாக தெரிவித்தனா். நிகழ்ச்சியில் ஆசிரியா் மா.கல்பனா, திலகவதி, ராஜேஸ்வரி, ரேகா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி கங்கா, ராஜேஸ்வரி, சுகுணா, பூபதி மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com