வனப்பகுதியில் சடலம் மீட்பு

சித்தேரி அருகே வனப் பகுதியில் சிறுமியின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

சித்தேரி அருகே வனப் பகுதியில் சிறுமியின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், எஸ்.அம்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பெருமாள். இவரது 18 வயதுடைய மகள் கோவையில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிந்த பிறகு அந்தச் சிறுமி தமது சொந்த ஊருக்கு வந்தாா்.

பிறகு ஊரில் கோயில் திருவிழாவில் பங்கேற்ற அவா், திடீரென காணமல் போனதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது பெற்றோா் அளித்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்த நிலையில், எஸ்.அம்மாபாளையம் அருகே வனப் பகுதியில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் எலும்புக் கூடாக ஒரு சிறுமி சடலமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் போலீஸாா் மற்றும் தடய அறிவியல் துறையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, சம்பவ இடத்தில் கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருள்களை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் சிறுமியின் சாவில் மா்மம் இருப்பதாக அவரது பெற்றோா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com