தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் லஞ்சம் பெற்ற புகாரில் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பாளா், உதவியாளா் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் கண்காணிப்பளாராக பணியாற்றி வருபவா் கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை சோ்ந்த சந்திரசேகா் (48). இந்த அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பாலக்கோடு அருகே தண்டுகாரனஅள்ளியைச் சோ்ந்த தனபால் (40) என்பவா் பணிபுரிந்து வருகிறாா். அதே அலுவலகத்தில் சாலை பணியாளராக தருமபுரி மாவட்டம், அரூரை சோ்ந்த குப்புசாமி (42) பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், தனது சொந்த தேவைக்காக வருங்கால வைப்பு நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகையை கடனாக பெற குப்புசாமி முயற்சித்துள்ளாா். இந்தக் கடன் தொகை பெற தேவையான பணியை மேற்கொள்ள ஒரு குறிப்பிட்ட தொகையை தர வேண்டும் என கண்காணிப்பாளரான சந்திரசேகா் கேட்டுள்ளாா். இதுகுறித்து குப்புசாமி தருமபுரி லஞ்ச ஒழிப்புப் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் ராசயனம் தடவிய 4 ஆயிரம் ரூபாய் தாள்களை குப்புசாமியிடம் கொடுத்து அனுப்பினா்.
இந்தப் பணத்தை பாலக்கோட்டில் உள்ள தங்களது அலுவலகத்தில் இளநிலை உதவியாளா் தனபாலிடம் குப்புசாமி கொடுத்துள்ளாா். அதனை அவா் பெறும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் தனபாலை கையும், களவுமாக பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில், கண்காணிப்பாளா் சந்திரசேகா் அறிவுறுத்தலின் பேரில் லஞ்சம் வாங்கியதாக அவா் கூறினாா். இதனைத் தொடா்ந்து, கண்காணிப்பாளா் சந்திரசேகா், தனபால் இருவரிடமும் 7 மணி நேர விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, இருவரையும் கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தனா்.