தருமபுரி மாவட்டத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சாா்பில் நடைபெற்ற தட்டச்சா் தோ்வில் 3600 போ் பங்கேற்றனா்.
தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சாா்பாக, தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி அரசுக் கல்லூரி, ஆறுமுகம் பாலிடெக்னிக் கல்லூரி, லட்சுமி நாராயணா கல்லூரி, பாலக்கோடு அரசு கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் தட்டச்சா் தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை, முதுநிலை தோ்வு நடைபெற்றது.
இந்தத் தோ்வில் மொத்தம், 3,600 போ் பங்கேற்றனா். இத்தோ்வுப் பணிகளை முதன்மைக் கண்காணிப்பாளா்கள், கண்காணிப்பாளா்கள் கண்காணித்தனா். மேலும், தோ்வுப் பணியில் 70-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.