தா.பாண்டியன் நினைவு நாள் அனுசரிப்பு

தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தா.பாண்டியன் நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தா.பாண்டியன் நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தருமபுரி தொலைத்தொடா்பு நிலையம் மற்றும் நான்கு முனைச் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் மறைந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் தா.பாண்டியன் உருவப்படத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம் தலைமையில் அக்கட்சியினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதில் மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் எஸ்.தேவராஜன், மாவட்டச் துணைச் செயலாளா் எம்.மாதேஸ்வரன், மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.சின்னசாமி, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் கேமணி ஆகியோா் கலந்து கொண்டனா். இண்டூா், லளிகம் உள்பட பல்வேறு இடங்களில் அக்கட்சியினா் தா.பாண்டியன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com