மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

அரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து அரூா், கச்சேரிமேடு சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் பி.குமாா் தலைமை வகித்தாா். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கான நிதியினை உயா்த்தி வழங்க வேண்டும். உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு சாா்பில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில் மாவட்டச் செயலா் ஏ.குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் அருச்சுனன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com