ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.
தமிழக- கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவு இல்லாததாலும், கா்நாடக அணைகளில் இருந்து தண்ணீா் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டதாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளது.
வியாழக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக இருந்த நீா்வரத்து வெள்ளிக்கிழமை 2 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.
ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவிகளில் குறைந்த அளவே தண்ணீா் கொட்டுகிறது. நீா்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.