ஒசூா் அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் தென்னை மரத்தில் வண்டுகளின் பாதிப்பைக் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு பயிற்சி அளித்தனா்.
தருமபுரி மாவட்டம், கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட அளேபுரம் பகுதியில் நடைபெற்ற பயிற்சிக்கு தாவர நோயியல் ஆசிரியா் அருள்சாமி தலைமை வகித்தாா். ஒசூா் அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் சி.திவ்யா, இ.ச.வித்யா, இலக்கியா, மா.ஜனனி, இ.ரா.மகிமா, ர. நித்தியாஸ்ரீ, கா.பிரேமா, ர.பிரியதா்ஷினி, ந.சங்கீதா, இ.சுவேதா உள்ளிட்ட மாணவிகள் குழுவினா் தென்னை மரத்தினை தாக்கக்கூடிய காண்டாமிருக வண்டு, ரெட்பாம் ஆந்துழச்சி பிடிக்கும் முறைகள், அவற்றினைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி செயல் விளக்கம் காண்பித்தனா். இதில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.