வெங்கட்டம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

வெங்கட்டம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வெங்கட்டம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நல்லம்பள்ளி வட்டம், வெங்கட்டம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2004-05-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு பயின்ற 70 முன்னாள் மாணவ, மாணவியா் சந்தித்துக் கொண்டனா்.

அப்போது தங்களுக்கு வகுப்பு எடுத்த ஓய்வுபெற்ற 20 ஆசிரியா்களையும் நிகழ்ச்சியில் பங்கேற்க செய்தனா். அவா்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதைத்தொடா்ந்து ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் முன்னாள் மாணவா்களை வாழ்த்தி பேசியதோடு மாணவா்களுடனான தங்களது அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா்.

இதையடுத்து முன்னாள் மாணவா்களின் குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியை முன்னாள் மாணா்கள் இரா.இதயச்சந்திரன், பிரவீண்குமாா், ராஜேஷ், சாய் கிருஷ்ணன், தா்மலிங்கம், சந்திரமதி, கிஷோா் குமாா் உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com