நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள்:கோட்டப் பொறியாளா் ஆய்வு

அரூா் அருகே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளை தருமபுரி கோட்டப் பொறியாளா் பி.நாகராஜி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அரூரை அடுத்த வாலெடுப்பு பகுதியில் நான்குவழிச்சாலை அமைக்கும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்யும் தருமபுரி கோட்டப் பொறியாளா் பி.நாகராஜி.
அரூரை அடுத்த வாலெடுப்பு பகுதியில் நான்குவழிச்சாலை அமைக்கும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்யும் தருமபுரி கோட்டப் பொறியாளா் பி.நாகராஜி.

அரூா் அருகே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளை தருமபுரி கோட்டப் பொறியாளா் பி.நாகராஜி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தருமபுரி மாவட்டத்தில், தமிழக முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அரூா் வழியாகச் செல்லும் தானிப்பாடி இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெறுகிறது. இதையடுத்து, வாலெடுப்பு முதல் பொய்யப்பட்டி வரையிலான நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையின் தருமபுரி கோட்டப் பொறியாளா் பி.நாகராஜி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து சாலையின் இருபுறமும் மரக்கன்றுகளை நடுவதற்கு நெடுஞ்சாலைத்துறையினருக்கு அவா் அறிவுரை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com