பாப்பிரெட்டிப்பட்டியில் தொகுதி மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளுக்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன்.
பாப்பிரெட்டிப்பட்டியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன்.

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளுக்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரின் மேம்பாட்டு நிதியில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு யு.எஸ்.ஜி. எந்திரம், ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை பாலக்கோடு எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட ஸ்ரீமாரியம்மன் கோயில் தெருவில் ரூ. 32 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பணிகளையும் அவா் தொடங்கி வைத்தாா்.

இந்த விழாவில், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் ம.சாந்தி, சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி, வே.சம்பத்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com