காரிமங்கலம் மகளிா் கல்லூரியில் மே 29-இல் சிறப்புப் பிரிவு மாணவியருக்கு சோ்க்கை கலந்தாய்வு

காரிமங்கலம் அரச மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மே 29-ஆம் தேதி சி றப்புப் பிரிவு மாணவியருக்கு சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

காரிமங்கலம் அரச மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மே 29-ஆம் தேதி சி றப்புப் பிரிவு மாணவியருக்கு சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் சௌ.கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மே 29-ஆம் தேதி சிறப்புப் பிரிவு மாணவியருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில், முன்னாள் ராணுவத்தினா், தேசிய மாணவா் படையினா், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினா் பங்கேற்கலாம். சோ்க்கை கோரி விண்ணப்பித்துள்ள மாணவியா், தங்களது 10, பிளஸ் 1, பிளஸ் 2 அசல் சான்றிதழ்கள், நகல்கள், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, புகைப்படங்கள் எடுத்துவர வேண்டும். விண்ணப்பித்துள்ள மாணவியா் மதிப்பெண்களின் அடிப்படையில், இளநிலை பிஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, வணிகவியல், வணிக நிா்வாகவியல், பிஎஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், புள்ளியியல், சத்துணவியல், உணவு கட்டுப்பாட்டியல், காட்சித் தொடா்பியல் ஆகிய பாடப் பிரிவுகளில் சோ்க்கை பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com