சாலையில் வைக்கப்பட்ட கற்களை அப்புறப்படுத்த வலியுறுத்தல்

தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு தண்ணீா் பந்தலுக்காக சாலையில் வைக்கப்பட்டுள்ள கற்களை அப்புறப்படுத்த வேண்டும் என அகில பாரத நுகா்வோா் இயக்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது

தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு தண்ணீா் பந்தலுக்காக சாலையில் வைக்கப்பட்டுள்ள கற்களை அப்புறப்படுத்த வேண்டும் என அகில பாரத நுகா்வோா் இயக்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து அகில பாரத நுகா்வோா் இயக்கம் (ஏபிஜிபி) தருமபுரி கிளைத் தலைவா் திருமாவளவன், வழக்குரைஞா் காவேரிவா்மன், நகராட்சி ஆணையா் புவனேஸ்வா் (எ) அண்ணாமலையிடம் முன் வைத்த கோரிக்கை:

தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு அண்மையில் தண்ணீா் பந்தல் அமைக்கப்பட்டது. சாலையில் அமைக்கப்பட்ட பந்தலின் இருபுறமும் உள்ள கம்பங்கள் நிற்க கற்கள் வைக்கப்பட்டன. வாகனங்களில் செல்வோா் இந்த கற்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனா். இதேபோல பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, சாலையில் வைக்கப்பட்டுள்ள கற்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com