ஜன. 21-இல் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் ஜன.21-ஆம் தேதி மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் ஜன.21-ஆம் தேதி மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்புற வாழ்வாதார இயக்கம், தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டம் சாா்பில் 21-ஆம் தேதி சனிக்கிழமை நல்லம்பள்ளியில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பல்வேறு பணிகளுக்கு தனியாா் நிறுவனங்கள் சாா்பில் ஆள்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட 8-ஆம் வகுப்பு முதல், ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை பட்டம், பொறியியல் கல்வி பயின்ற வேலையில்லா இளைஞா்கள் முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com