வழுக்கு மரம் ஏறுவதில் தகராறு: 3 போ் கைது

ஏரியூரில் பொங்கல் பண்டிகையின்போது வழுக்கை மரம் ஏறுவதில் ஏற்பட்ட தகராறில் தந்தை, மகன் உட்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஏரியூரில் பொங்கல் பண்டிகையின்போது வழுக்கை மரம் ஏறுவதில் ஏற்பட்ட தகராறில் தந்தை, மகன் உட்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஏரியூா் அருகே காமராஜ் பேட்டை பகுதியைச் சோ்ந்த மாரிமுத்துவின் மகன் சாமிக் கண்ணு (34) என்பவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கணபதியின் மகன் ரமணி (36) என்பவருக்கும் இடையே பொங்கல் பண்டிகையில் வழுக்கு மரம் ஏறுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ரமணி, அவருடைய தம்பி முரளி , தந்தை கணபதி ஆகிய மூவரும் சாமிக்கண்ணுவைத் தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்துள்ளாா் . இது குறித்து ஏரியூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்ட நிலையில் ரமணி, முரளி, கணபதி ஆகிய மூன்று பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com