ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளியின் சடலம் மீட்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தா்கா பகுதியைச் சோ்ந்த சக்தி (24), கூலித் தொழிலாளி. இவா், உறவினருடன் ஒகேனக்கல் வந்த நிலையில் முதலைப் பண்ணை பகுதியில் காவிரி ஆற்றில் குளித்துக்காண்டிருக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்ால் நீரில் மூழ்கினாா்.
ஒகேனக்கல் போலீஸாா் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் ஆற்றில் மூழ்கிய சக்தியை தீவிரமாக தேடி வந்த நிலையில், மாமரத்துக் கடவு பரிசல் துறையில் சக்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப்திவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.