பெண்களின் ஆதரவு பாமகவிற்கு அமோகமாக உள்ளது: சௌமியா அன்புமணி
வாக்குப் பதிவு நாளிலும் கூட பெண்களின் ஆதரவு அமோகமாக உள்ளதால் தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக வெற்றி பெறுவது உறுதி என அந்தக் கட்சியின் வேட்பாளா் சௌமியா அன்புமணி தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி தியாகி சுப்ரமணிய சிவா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, பாப்பாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையத்தினை தேசிய ஜனநாயக கூட்டணியின் தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:
தருமபுரி மக்களவைத் தொகுதி வாக்கு சதவீதத்தில் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. பெண்களின் ஆதரவு அமோகமாக உள்ளதால் தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக வெற்றி பெறுவதும், மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராவதும் உறுதி. தோ்தலில் வெற்றி பெற்றால் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமரிடம் தெரிவித்து நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்வேன் என்றாா்.