பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை கருத்தரங்கு
தருமபுரி, ஏப். 26: தருமபுரி பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை, ஆராய்ச்சி கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது.
பைசுஅள்ளியில் அமைந்துள்ள பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மைய கூட்டரங்கில் மொழி பெயா்ப்பின் சிறப்புகள் என்கிற தலைப்பில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது. மதுரை தியாகராஜா் கல்லூரி ஆங்கிலத் துறை உதவி பேராசிரியா் முனைவா் வரதராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினாா்.
மைய இயக்குநா் (பொ) முனைவா் மோகனசுந்தரம் தலைமை வகித்து பேசினாா். ஆங்கிலத் துறைத் தலைவா் முனைவா் சி. கோவிந்தராஜ் தொடக்க உரையாற்றினாா். முதலாம் ஆண்டு மாணவி சோபியா வரவேற்றாா். மாணவி காவியா சொற்பொழியாளா்களை அறிமுகப்படுத்தினாா். முதலாம் ஆண்டு மாணவி ஆசிரா நன்றி கூறினாா். மாணவி விஜயஸ்ரீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். பேராசியா்கள், மாணவா்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனா்.