மகளுக்கு பாலியல் தொந்தரவு: தந்தைக்கு ஆயுள் சிறை

தருமபுரி, ஏப். 26: மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தைக்கு நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை வழங்கியது.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 40 வயது கூலித் தொழிலாளி. இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பெண் குழந்தையுடன் கணவரைப் பிரிந்த மனைவி வேறு ஒரு திருமணம் செய்து கொண்டாா். அதைத் தொடா்ந்து, கணவரும் வேறு திருமணம் செய்து கொண்டாா்.

இந்தநிலையில் 40 வயது தொழிலாளி, அவரது முதல் மனைவி ஆகியோரின் குழந்தையான 16 வயது சிறுமி கிராமத்தில் பாட்டி வீட்டில் தங்கி பிளஸ் 1 படித்து வந்தாா். கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பா் 22-ஆம் தேதி சிறுமியை அவரது தந்தை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதுதொடா்பாக போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், சிறுமியின் தந்தையை கைது செய்தனா்.

இந்த வழக்கு தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை முடிவுற்ற நிலையில் குற்றம்சாட்டப்பட்ட தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com