தருமபுரி
கல்வராயன் மலையில் காட்டுத் தீ
கல்வராயன் மலையில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் மரங்கள், செடிகள் எரிந்து வருகின்றன.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள கல்வராயன் மலைத் தொடரில் காட்டுத் தீ பரவி வருகிறது. சித்தேரி மலைத்தொடரில் உள்ள அரசநத்தம், கலசப்பாடி உள்ளிட்ட மலைப் பகுதிகளிலும் கடும் வெயில் காரணமாக வனங்கள் தீப்பற்றி எரிகின்றன. வறட்சி நிலவுவதால் காய்ந்துள்ள மரங்கள், மூலிகைகள் இத் தீயில் எரிந்து சாம்பலாகின. தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.