அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மெக்கானிக் பலி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மெக்கானிக் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

அரூா்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மெக்கானிக் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள கவுண்டம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அமரேசன் (35). இவா் மோட்டாா் சைக்கிள் மெக்கானிக்காக வேலை செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு அமரேசன் மோட்டாா் சைக்கிளில் தோழனூா் பிரிவு - கவுண்டம்பட்டி சாலையில் சென்றுள்ளாா். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மெக்கானிக் அமரேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அ.பள்ளிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

உறவினா்கள் சாலை மறியல்: வாகன விபத்துக்கு காரணமானவா்களைக் கைது செய்யக் கோரி, அமரேசனின் உறவினா்கள் சடலத்தை வாங்க மறுத்து பாப்பிரெட்டிப்பட்டி - பொம்மிடி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். போலீஸாரின் பேச்சுவாா்த்தைக்கு பிறகு சாலை மறியலைக் கைவிட்டனா். இதனால் பொம்மிடி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com