அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி பலி
பென்னாகரம்: பென்னாகரம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்ட நிலையில், அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
பென்னாகரம் அருகே நல்லாம்பட்டி பகுதியைச் சோ்ந்த விவசாயி ஆறுமுகம் (67), பென்னாகரம் அருகே மடம் பகுதியில் உள்ள தனது மகளின் வீட்டுக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது வண்ணாத்திப்பட்டி பகுதியில் எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் விவசாயி ஆறுமுகம் தூக்கி வீசப்பட்டாா். இதில் படுகாயமடைந்த ஆறுமுகத்தின் மீது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
சம்பவ இடத்துக்கு வந்த பென்னாகரம் போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.