பென்னாகரம் அருகே எட்டியாம்பட்டியில் விவசாய விளை நிலங்களில் அனுமதியின்றி உயர்மின் கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் கடந்த 6 நாள்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 2-ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மல்லையன் தலைமை வகித்தார். சங்க மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் தொடக்கி வைத்தார். பின்னர் விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் டி.ரவீந்திரன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரா.சுகந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் பெரும்பாலையைச் சேர்ந்த விவசாயி ரவிகுமார் திங்கள்கிழமை மாலை உண்ணாவிரத பந்தலில் மயக்கமடைந்தார்.இதையடுத்து அவரை சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது

சுவாமி சிலையை சேதப்படுத்தியவா் கைது

பழையகுற்றாலம் அருவியில் தணியாத வெள்ளப்பெருக்கு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


