எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

உயர்மின் கோபுரம் அமைப்பதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம்: விவசாயி மயக்கம்

பென்னாகரம் அருகே எட்டியாம்பட்டியில்  விவசாய விளை நிலங்களில் அனுமதியின்றி உயர்மின் கோபுரங்கள்

Updated On :25 டிசம்பர் 2018, 8:40 am IST

பென்னாகரம் அருகே எட்டியாம்பட்டியில்  விவசாய விளை நிலங்களில் அனுமதியின்றி உயர்மின் கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் கடந்த 6 நாள்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 2-ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மல்லையன் தலைமை வகித்தார். சங்க மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் தொடக்கி வைத்தார். பின்னர் விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் டி.ரவீந்திரன்,  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரா.சுகந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் பெரும்பாலையைச் சேர்ந்த விவசாயி ரவிகுமார் திங்கள்கிழமை மாலை உண்ணாவிரத பந்தலில் மயக்கமடைந்தார்.இதையடுத்து அவரை சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.