யானை தாக்கியதில் பெண் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள்பட்ட தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள குடிசையூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜம்மா. இவர் அரசுப் பள்ளியில் சமையல் பணி செய்து வந்தார்.
இவர் தெக்களி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற திருவிழாவை காண சென்ற போது, அந்த வழியாக வந்த யானை ராஜம்மாவை விரட்டியது. யானையைக் கண்ட ராஜம்மா ஓட்டம் பிடித்தார். ஆனால், விரட்டி வந்த யானை ராஜம்மாவை தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற வனத் துறையினர் ராஜம்மாவின் உடலைக் கைப்பற்றினர். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.