மத்தூர் அருகே ஒரு குறிப்பிட்ட ஜாதி குறித்து டிக் டாக் செயலியில் அவதூறான கருத்தை பரப்பியதாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
மத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் படிக்கும் 17 வயதான மாணவர் டிக் டாக் செயலியில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை அவதூறாக பேசி கருத்து பதிவிட்டிருந்தார். இதையடுத்து, மத்தூர் அருகே உள்ள சாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் டிக் டாக் செயலியில் அவதூறாக பேசிய இளைஞரை கைது செய்ய கோரி ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜபாண்டியனிடம் புகார் அளித்தனர்.அதன் பேரில் மத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து மாணவரைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.