மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 04th January 2019 08:20 AM | Last Updated : 04th January 2019 08:20 AM | அ+அ அ- |

மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததை திரும்பப் பெறக் கோரி, மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, பென்னாகரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் அன்பு முன்னிலை வகித்தார். தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார், மண்டல பொருளாளர் கோபிநாத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில், மேக்கேதாட்டு பகுதியில் கர்நாடக அரசு அணைகட்டக் கூடாது எனவும், அதற்கான அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும், இதற்கு மாநில அரசு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினர். இதில், 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.