அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வு ஜூன் 18-ஆம் தேதி நடை பெறுகிறது.

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வு ஜூன் 18-ஆம் தேதி நடை பெறுகிறது.
இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் விஜயேந்திரன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் வரும் 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதில் பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. 19-ஆம் தேதி காலை 10 மணிக்கு பி.காம். வணிகவியல், பிபிஏ வணிக நிர்வாகவியல், பி.ஏ. வரலாறு, பொருளியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு பி.ஏ. தமிழ், பி.லிட். தமிழ் மற்றும் பி.ஏ. ஆங்கில இலக்கியம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. 
இந்தக் கலந்தாய்வில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவியரும் பங்கேற்கலாம். மேலும், கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவியர் பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய வகுப்புகளுக்கான அசல் மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் இரண்டு நகல்கள் உடன் பெற்றோருடன் பங்கேற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com