பர்கூர் மகா சாந்த காளியம்மன் கோயில் 54-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பர்கூரில் திருப்பத்தூர் சாலையில் உள்ள மகா சாந்த காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பௌர்ணமியையொட்டி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு கணபதி ஹோமத்துடன் சனிக்கிழமை விழா தொடங்கியது. தொடர்ந்து, சாந்தி ஹோமம், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
அம்மன் சிறப்பு அலங்காலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பர்கூர், மல்லப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.